தாதியர்கள் இருவருக்கு கொரோனா : வைத்தியசாலையின் சில விடுதிகளுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

தாதியர்கள் இருவருக்கு கொரோனா : வைத்தியசாலையின் சில விடுதிகளுக்கு பூட்டு

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலையின் 5ஆம் மற்றும் 9ஆம் விடுதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான மற்றைய தாதியர் உள்ளிட்ட தொற்றாளர்கள் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கும் மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment