பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது - பணம் மற்றும் இரு வாகனங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது - பணம் மற்றும் இரு வாகனங்கள் மீட்பு

புத்தளத்தில் ரூ. 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் கைது-Suspect Arrested With Rs 15 Lakhs-Worth Heroin-2 Vehicles -Puttalam
புத்தளம் நகரில் 15 இலட்சம் பொறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று (12) அதிகாலை புத்தளம் நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 75 கிராம ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஹெராயின் விற்பனை செய்யப்பட்ட 2 இலட்சத்து 62,000 ரூபா பணமும், வாடகைக்கு பெறப்பட்ட கார் உட்பட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - றஸ்மின்)

No comments:

Post a Comment