துப்பாக்கி முனையில் சுமார் மூன்று கோடி ரூபா கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

துப்பாக்கி முனையில் சுமார் மூன்று கோடி ரூபா கொள்ளை

கட்டான, அக்கறபஹ பிரதேசத்தில் சுமார் 3 கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு வந்த 5 பேரைக் கொண்ட குழுவினால் இக்கொள்ளைச் சம்பவம் புரியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 9.30 அளவில் காரில் வருகை தந்தவர்களே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காவலாளியும் வர்த்தகரும் வீட்டில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment