கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டிடத்தின் உரிமையாளர் கைது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டிடத்தின் உரிமையாளர் கைது!

கண்டி, பூவெலிக்கட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கட்டிடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பூவெலிக்கட பகுதியின் சங்கமித்த வீதியில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று கடந்த 20 ஆம் திகதி அதிகாலை வீடொன்றி மீது இடிந்து விழுந்திருந்தது.

சம்பவத்தில் ஒன்றரை மாத குழந்தை மற்றும் குழந்தையின் தாய், தந்தை ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டிடத்தின் உரிமையாளர் அனுர லெக்கே இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment