பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும்

நூருல் ஹுதா உமர்

அந்நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் அந்நூர் சமூக அமைப்பினால் மருதமுனையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகள் பொது இடங்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் குடிநீர் தேவையை போக்க கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் அந்நூர் சமூக அமைப்பினால் நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக அண்மையில் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எம். நளீம் மற்றும் கல்முனை பிரதேச இணைப்பாளர் எம்.எச். ரைஸுல் ஹக்கீம் ஆகியோர் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தனர்.

No comments:

Post a Comment