மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரருக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரருக்கு பிணை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பன்குடாவெளியில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதமன்றில் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதவான் ஜீவராணி கருப்பையா அனுமதி வழங்கியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 21அந் திகதி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவர் பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுளைந்து மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவைழைத்து அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகரிகளின் முறைப்பாட்டிற்கமைய கரடியனாறு பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்றில் தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 183, 344, 323 ஆகியவற்றில் கீழ் வழக்கு தாக்கல் செய்யபட்டடிருந்தது.

இதனடிப்படையில் ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்றினால் சந்தேக நபர்களை 30.09.2020 புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு விசாரணை புதன்கிழமை (30) ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்ற நீதவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாரினால் கடுமையான எதிப்பு வெளியிட்ட நிலையில் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததன் காரணமாக சந்தேக நபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் கொண்ட சரீர பிணையின் செல்ல அனுமதி வழங்கியதுடன் வழக்கு விசாரணையை நவம்பர் 27ஆந் திகதி வரை ஒத்திவைத்தார்.

சந்தேக நபர்களான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மற்றும் அவரது உதவிளார் இருவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.முகமட் அமீன் மற்றும் சட்டத்தரணி தாவூத் உவைஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

No comments:

Post a Comment