அம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் நாளை (30) காலை 6.00 மணி முதல் 24 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய தெஹிகஹலந்த, மிரிஜ்ஜவில, சிசிபசகம, கொடவாய, மானஜ்ஜாவ மற்றும் பஹல பெரகம பிரதேசங்களில் குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அம்பலாந்தோட்டை நீர் வழங்கல் திட்டத்திற்கு சொந்தமான அம்பலாந்தோட்டையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீரைக் கொண்டு செல்லும் பரிமாற்றக் குழாய், அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் பரிமாற்றக் குழாய் விநியோகத்திற்கு இணைக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment