கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம் - யாழில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் ஆலயமொன்றில் இடம்பெறும் அதிசயம் பார்க்க  படையெடுக்கும் மக்கள் - Yarldeepam News
யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிந்ததாக ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு எனவும் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment