வவுனியா கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், புகையிரதமும் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பாதையில் நின்றிருந்த யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், புகையிரதம் பாதையை விட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து காரணமாக பல மணி நேர தாமதத்திற்கு பின்னரே புகையிரதம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment