9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது வக்கினை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை குடிமகனாக எனது கடமையை நிறைவேற்ற நான் இன்று (5) வாக்களித்தேன்.
வாக்குச் சாவடியின் பணிகள் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அமைந்துள்ளன, தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மிரிஹானயில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள விவேக்க ராமையிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவுசெய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment