இலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை இந்த தேர்தல் மேலும் வலுப்படுத்தி உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ள ஜப்பான் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில், கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை, இந்தத் தேர்தல் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமைதியான, சுதந்திரமான, நியாயமான தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டமை தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு, இலங்கையின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகளை வழங்க ஜப்பான் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment