வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை - ஹரிஸ்பத்துவவில் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 28, 2020

வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை - ஹரிஸ்பத்துவவில் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்

மக்களுக்குச் சேவையாற்ற நான் ...
ஐ.ஏ. காதிர் கான் 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். இவ்வாறு வெளிப்படையாகத் தெரிந்திருந்த போதிலும், தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை என, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

ஹரிஸ்பத்துவ தொகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது, கண்டி நகரம் நவீன நகராக அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது. இவை மாத்திரம் அல்லாமல், இம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி இம்மாவட்டத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் துரிதமாக அபிவிருத்தி செய்துள்ளார். அவரது வேலைத்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச்செல்வதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தமது ஆதரவுகளை பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்க வேண்டும்.

இலங்கையில் வட கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்கி, அவர்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதே எனது இலக்காகும். அந்த இலக்கினை அடைவதற்கு கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். 

இதேவேளை, மத்திய மலை நாட்டில் வாழும் எமது உறவுகள் கண்டி வாழ் தமது உறவினர்கள் நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து, பொதுஜன பெரமுனவுக்கும் தனது விருப்பு இலக்கத்துக்கும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment