கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான ...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. 

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. 

எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் விமான நிலையத்தினை திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment