சிறைச்சாலைக்கு கஞ்சா, புகையிலை வீசியவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

சிறைச்சாலைக்கு கஞ்சா, புகையிலை வீசியவர் கைது

பொலன்னறுவைச் சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலை வீசிய குற்றச்சாட்டில் ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, சிறைச்சாலை அதிகாரிகளினால் பொலன்னறுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணை மேற்கொண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரினால் வீசப்பட்ட 01 கிராம் 590 மில்லி கிராம் கஞ்சாவும், 56 கிராம் 150 மில்லி கிராம் புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை (31) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment