இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருளை வாகனத்தில் கடத்தி சென்ற நபரை பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வல்வெட்டித்துறை, குச்சன் ஒழுங்கையைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு ஹயஸ் ரக வேன் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை கடத்தி செல்வதாக பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வாகனத்தை மடக்கிய அதிரடிப் படையினர், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த போதைப் பொருள் இரு பொதிகளாக பொதி செய்யப்பட்ட நிலையில், சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளடன், மீட்கப்பட்ட போதைப் பொருளையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக விசாரணைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர் இனறையதினம் (02) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
No comments:
Post a Comment