பங்காளதேஷ் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

பங்காளதேஷ் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி

பங்காளதேஷ் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

பங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1738 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்காளதேசத்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வங்காளதேச மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சவுத்ரி டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 29-ந் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜூன் 6-ந் திகதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஜூன் 18-ந் திகதி மேலும் உடல்நிலை மோசமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment