மீகஹவத்த பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (28) மீகஹவத்த பொலிஸ் நிலையத்தில், வங்கி முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அன்றையதினம் 1,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 07 ஐ வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) இது தொடர்பாக மீகஹவத்த பொலிஸாரினால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது 1,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளை தொடர்ந்து வேபட பிரதேசத்தில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரதான சந்தேகநபரின் வேபட பிரதேசத்திலுள்ள வீட்டைச் சோதனையிட்டபோது, 1,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள் 10,500 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள் 01, மடி கணனி, பிரின்டர், கணனித் திரை ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வேபட மற்றும் கோனஹேன பிரதேசங்களைச் சேர்ந்த 29, 52 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேகநபர்களை இன்று (29) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment