பெலாருஸிலிருந்து 290 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

பெலாருஸிலிருந்து 290 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்

இலங்கைக்கு வர முடியாமல், பெலாருஸில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 290 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம், இன்று (28) அதிகாலை மின்ஸ்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானோர், உயர் கல்விக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கை மாணவர்களாவார்.

இவ்விமானப் பயணிகள், பெலாருஸின் மின்ஸ்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து வந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானத்தில், இன்று காலை 10.02 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் பெலாருஸில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment