ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் இன்று (20) முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல். வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கும் சேவை பெறுநர்கள், வார நாட்களில் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 4.00 வரை முற்பதிவு செய்து சேவைகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மற்றுமொரு ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித். சீ.கே. அளககோன், குறித்த அறிவிப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் தற்போது விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கார் உரிமை மாற்றக் கிளையில் முற்பதிவுகளை மேற்கொள்ள 0706354108 எனும் புதிய தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளது.
அத்துடன், சொகுசு வரி செலுத்துவது தொடர்பான விடயங்களை அறிய 0706354107 எனும் மற்றுமொரு தொலைபேசி இலக்கத்தையும் திணைக்களம் வழங்கியுள்ளது.
ஏனைய விடயங்கள் தொடர்பான முற்பதிவுகள் மற்றும் விபரங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி, முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment