வட கொரிய ஜனாதிபதி இருதய அறுவை சிகிச்சை செய்ததாக எந்த அறிகுறியும் இல்லை - தென் கொரிய உளவு நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

வட கொரிய ஜனாதிபதி இருதய அறுவை சிகிச்சை செய்ததாக எந்த அறிகுறியும் இல்லை - தென் கொரிய உளவு நிறுவனம்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தென் கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர், புதன்கிழமை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவிடம், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். 

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வட கொரியாவின் தந்தை எனப்படும் கிம் உல் சங் - உன் பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் ஜொங் உன் பங்கேற்கவில்லை. 

கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கிம் ஜொங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்த பின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார். 

இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. 

இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த வாரம் கிம் உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்றார். 

புதன்கிழமை, உளவு நிறுவனம் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் கிம் இந்த ஆண்டு இதுவரை 17 முறை பொதுவில் தோன்றியிருப்பதாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைவானது என்றும் தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் இந்த காலகட்டத்தில் கிம் வழக்கமாக சராசரியாக 50 முறை பொதுவில் தோன்றியுள்ளார். அவர் பொது வெளியில் தோன்றுவது குறைந்தமையானது, அநேகமாக கிம் உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தியதன் விளைவாகவும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment