கொரோனா வைரஸ் பரவல் எங்கிருந்து ஆரம்பமானது என்பது குறித்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கும் நாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் இதனை முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்த விசாரணைக்காக குரல் கொடுக்கும் நாடுகளிற்கு இலங்கை தனது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அவுஸ்திரேலியா தலைமையில் கொரோனா வைரஸ் குறித்த சுயாதீன விசாரணைக்கு குரல் கொடுக்கும் கூட்டணிக்கு ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகள் கூட ஆதரவளித்துள்ளன என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் நகல்வடிவ ஆவணத்திற்கு 62 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
No comments:
Post a Comment