கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் - திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் - திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் கொரோனா தொற்று பற்றி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து 744 பேர் வருகை தந்து சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து 3001 பேர் நேற்றை வரைக்கும் வருகை தந்ததாகவும் 2222 சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர் 689 சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவித்தார்

திருகோணமலை மாவட்டத்தில் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நோயாளர்களும் இனம் காணப்படவில்லை ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னரே அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்

முப்படை வீரர்கள் 49 பேர் விடுமுறைக்கு வருகை தந்ததில் கொழும்பில் இரண்டு பேருக்கு நோய்த்தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் கந்தளாய் – ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு நபர்களின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார திணைக்கள ஊழியர்கள் தமது உயிர்களை பணயம் வைத்துக் கொண்டு நோயாளர்களின் விடயத்தில் இரவு பகலாக சேவையாற்றி வருவதாகவும் தொடர்ந்தும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment