உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளது.
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் இன்றைக்கு சுமார் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 18 லட்சத்துக்கு மேற்பட்டோரும், பிரேசில் நாட்டில் 6 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் பிரேசில் நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அங்கு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும், கொரோனா பாதிப்பில் இருந்து 27 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment