நேற்று காலை துறைமுகப்பகுதியில் உள்ள தமது வேலைத்தளத்திற்கு ஒரு சிறியரக பட்டா வேன் ஒன்றில் சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பேலியகொடைக்கு அண்மையில் உள்ள இங்குருகொட சந்தியில் வைத்தே வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும் சுகாதாரத் தரப்பினரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பொதுமக்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட சமுக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ள நிலையில், இவ்வாறு தொழிலாளர்கள் மிக நெருக்கமாக ஒரு சிறியரக வேனில் சென்றுள்ளமை தவறான நடவடிக்கையெனக் கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment