எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த “சஹன பியவர" சமுர்த்தி முற்பணக்கடன் வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மிலின் வழிகாட்டலில் சமுர்த்தி வங்கியினால் வட்டியில்லாக் கடன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி வங்கியினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவுவிலும் சமுர்த்தி பெறும் மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தலைமையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சகிதம் கலந்து கொண்டு நிதிகளை வழங்கி வருகின்றனர்.
இதன் போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 5112 சமுர்த்திப் பயனாளிகள் உள்ள நிலையில், “சஹன பியவர" சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய ஐயாயிரம் ரூபாய் வீதம் சனிக்கிழமை வரை 3351 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment