ஆவா குழு உறுப்பினரின் பிறந்த நாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

ஆவா குழு உறுப்பினரின் பிறந்த நாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

எனினும் இதன்போது குறித்த கும்பலின் முக்கிய சந்தேகநபர் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து குறித்த இடத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். 

அதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 மோட்டார் சைக்கிள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் 5 மோட்டார் சைக்கிள்களையும் இராணுவத்தினர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment