இது தேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமல்ல : தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

இது தேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமல்ல : தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம்

(நா.தனுஜா) 

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், இது தேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமல்ல என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. 

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான உத்தியோகத்தர்களும் அவர்களுடைய பணியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையே உள்ளது என்று அந்நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்திருக்கிறார். 

'பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. 

1988 - 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவது இதுவே முதற் தடவையாகும். 

தேர்தல்கள் இது விடயத்தில் உரிய அனைத்து சட்டக்கடப்பாடுகளையும் பூர்த்தி செய்திருப்பினும், இது தேர்தலை நடாத்துவதற்கு உகந்த தருணமல்ல' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment