குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 8 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (04) குமுழமுனை பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்து 8 பேரும் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
No comments:
Post a Comment