இலங்கையில் 6 ஆவது கொரோனா மரணம், 80 வயது ஆண் பலி - சிகிச்சை பெறுவோர் 134 பேர், கண்காணிப்பில் 257 பேர் - இதுவரை இலங்கையர்கள் 12 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

இலங்கையில் 6 ஆவது கொரோனா மரணம், 80 வயது ஆண் பலி - சிகிச்சை பெறுவோர் 134 பேர், கண்காணிப்பில் 257 பேர் - இதுவரை இலங்கையர்கள் 12 பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை 10.00 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணம் கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த மார்ச் 30 ஆம் திகதி நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார்.

மூன்றாவது மரணம் ஏப்ரல் 01 ஆம் திகதி பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர் மரணித்திருந்தார்.

நான்காவது மரணம் ஏப்ரல் 02 ஆம் திகதி, 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

5 ஆவது மரணம், ஏப்ரல் 04 ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அண்மையில் இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற 52 வயதான நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மெல்பர்னில் மரணமடைந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பிரிட்டனில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதான இலங்கையர் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை மார்ச் 25 ஆம் திகதி யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான நபர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 6 பேரும், இலங்கையில் 6 பேரும் என இலங்கையர் 12 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 178 ஆக காணப்படுகின்றது.

இன்றையதினம் (07) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 178 பேரில் தற்போது 134 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 06 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 257 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 178
குணமடைவு - 38
சிகிச்சையில் - 134
மரணம் - 06

இலங்கையில் - 06
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

வெளிநாட்டில் - 06
பிரிட்டனில் - 02 பேர் (06)
மெல்பர்னில் - ஒருவர் (04) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 38
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 178
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment