ரமழான் தலைப்பிறை தென்படவில்லை - ஏப்ரல் 25 நோன்பு ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

ரமழான் தலைப்பிறை தென்படவில்லை - ஏப்ரல் 25 நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்ல் எங்கும் தென்படாததன் காரணமாக, நோன்பு நாளை மறுதினம் (25) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (23) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1441 இற்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஏப்ரல் 25 ஆம் திகதி ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன உத்தியோகபூர்வமாக கூட்டாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment