சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் 1,25,000 ஊழியர்களுக்கும் சம்பளம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் 1,25,000 ஊழியர்களுக்கும் சம்பளம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாட்டிலுள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் 1,25,000 ஊழியர்களுக்கும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அவர்களது மார்ச் மாத சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிவில் விமான சேவைகள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் மினுவாங்கொடை உடுகம்போல இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர வர்த்தக வலய ஊழியர் நலன்புரி சங்கத்தின் குழுவுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரையிலான விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களது மார்ச் மாதச் சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் நலன்புரிச் சங்க தூதுக்குழு அமைச்சரை சந்தித்து ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து எடுத்து வைத்துள்ளனர். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடனடியாக தலையிட்டு சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலை தொழிற்சாலை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அவர்களது சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

நாட்டில் உள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களிலும் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து க்கும் கூடுதலான தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர் இவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment