எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி

நிர்பயாவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமாகயிருந்தவர்கள் தூக்கிலிடப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் நான் எனது மகளின் படத்தை கட்டித்தழுவினேன் என நிர்பயாவின் தாயார் ஆசாதேவி தெரிவித்துள்ளார். 

நீதிக்கான எங்களது போராட்டம் வேதனைகள் மத்தியில் இடம்பெற்றது, மிகவும் துயரமானது ஆனால் நாங்கள் இறுதியாக நீதியை பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய புதல்விகளிற்கான நீதிக்காக நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்போம், என தெரிவித்துள்ள ஆசாதேவி நான் எனது மகளின் புகைப்படத்தை கட்டித்தழுவிக் கொண்டேன் மிருங்களை தூக்கிலிட்டு விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment