எரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்கள் இன்று நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை காரணமாக, அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் வீரசிங்க தெரிவிக்கையில், தட்டுப்பாடு இன்றி முழு நாட்டிற்கும் எரிபொருளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து அநுராதபுரம், மட்டக்களப்பு, பேராதெனிய மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட இடங்களுக்கு இந்த எரிபொருள் ரயில்கள் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை மக்கள் அநாவசியமாக பீதியடைய வேண்டிய தேவையில்லை.
அத்துடன், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக எரிபொருளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment