கொரேனா அச்சத்தால் கொல்கத்தா சிறையில் மோதல் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

கொரேனா அச்சத்தால் கொல்கத்தா சிறையில் மோதல்

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலையொன்றில் கொரேனா வைரஸ் அச்சம் காரணமாக மோதல்கள் வெடித்துள்ளன. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரிப்பதன் காரணமாக தங்களை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுன் சிறைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டவேளை பலர் காயமடைந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பலருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தங்களிற்கு வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் கைதிகள் தங்களை பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உறவினர்கள் சிறைக் கைதிகளை சந்திப்பதை அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளமையும் சிறைக் கைதிகளிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment