நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தனது கருத்தில், அரசாங்கத்தால் கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தால் மாத்திரம் இந்த நோய்யை முற்றாக அழித்து விட முடியாது நாட்டு மக்களும் இதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
இக்கொடூர நோயினை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், பொலிசார்கள், அரச அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுருத்தல்கள், கட்டளைகளை பின்பற்றி வெளியிடங்களில் அதிகமாக நடமாடுவதை குறைத்து வீடுகளிலேயே இருப்பது சிறந்ததாகும்.
நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இதிலிருந்து தமது நாட்டை காப்பாற்ற வேண்டும்.
வசீம் பஹ்ருதீன்
No comments:
Post a Comment