பத்தனை டொவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் சுமார் 10 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸ் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலே இன்று (24) மாலை 05 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது.
கடும் வரட்சி காலநிலையால் தீ பரவல் அதிகரித்து செல்வதுடன் திம்புள்ள பிரதான வீதி பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு காட்டுத் தீ வேகமாக பரவி வருதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தொடரும் வரட்சி காலநிலையில் குடிநீர் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நீரேந்தும் பகுதிகள் நீர் அதிகளவில் குறைந்துள்ளதுடன் டொவோன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சியின் அழகும் குன்றியுள்ளது.
தீ பரவலை கட்டுப்படுத்த திம்புள்ள, பத்தனை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் முயற்சித்து வருகின்றனர்.
மலையக நிருபர் இராமச்சந்திரன்
No comments:
Post a Comment