பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் கைது

அஸீம் கிலாப்தீன் 

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமானிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் சம்பந்தமாக அல்லது அவருக்கு சேறு பூசும் வகையில் சமூகவலைத்தளத்தில் பரவும் வீடியோ ஒன்றை நீக்குவதற்கு குறிப்பிட்ட சந்தேகநபர் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ஐந்து லட்சத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர் முயற்சித்தபோது அனுராதபுர குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸீம் கிலாப்தீன்

No comments:

Post a Comment