காசா எல்லையில் பலஸ்தீன இளைஞன் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக் கொலை - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

காசா எல்லையில் பலஸ்தீன இளைஞன் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக் கொலை

காசா எல்லை பகுதியில் குண்டு வைக்க முயன்றதாக குற்றம்சாட்டி பலஸ்தீன இளைஞர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் காலை சுட்டுக் கொன்றதோடு மேலும் மூன்று பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட பலஸ்தீனரின் உடலை இஸ்ரேல் இராணுவம் புல்டோசர் தகடினால் தூக்கி எடுத்துச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரு பலஸ்தீனர்கள் எல்லை வேலியை அணுகி குண்டு வைக்க முயன்றதை அடுத்து அங்கு விரைந்த படையினர் இரு பலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதில் காயமடைந்த இரண்டாவது பலஸ்தீனர் உடன் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு கான் யூனிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயப்பட்டவரை வெளியேற்ற முயலும்போது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்ததாக காசாவின் பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment