வவுனியா காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் - விசேட அதிரடிப் படையினர் முற்றுகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

வவுனியா காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் - விசேட அதிரடிப் படையினர் முற்றுகை

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியாவிலிருந்து சென்ற விசேட அதிரடிப் படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட கஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment