ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் டேஹுடி மாகாணத்திற்கு உட்பட்ட நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென பனிச் சரிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் இந்த பனிச் சரிவில் மக்களும் சிக்கிக் கொண்டனர். இந்த பனிச் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் பனிச் சரிவில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் மிரமூர் பகுதியில் 16 பேரும், அச்டர்லேபகுதியீல் 3 பேரும் என மொத்தம் 19 பேர் பலியாகினர்.
மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த பனிச் சரிவில் பல வீடுகள் சேதமடைந்து உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment