ரஞ்சன் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை தவறாக பயன்படுத்துகிறார் - மேஜர் அஜித் பிரசன்ன அனைவரினதும் அபிமானத்தை வென்றவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

ரஞ்சன் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை தவறாக பயன்படுத்துகிறார் - மேஜர் அஜித் பிரசன்ன அனைவரினதும் அபிமானத்தை வென்றவர்

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை தவறான விதத்தில் பயன்படுத்துகிறார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் அவசியமென சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஓய்வுபெற்ற இராணுவத்தின் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன அனைவரின் அபிமானத்தை வென்றுள்ளார்.

ஏனெனில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமின்றி உண்மை நிலையை வெளிப்படுத்தக் கூடியவர். இதனால்தான் அவர் மீது பல்வேறான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற சிறப்புரிமையை தவறான விதத்தில் பயன்படுத்தி ஊடக பிரதானிகளுக்கும், ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment