முதலாவது அரச தலைவராக இலங்கை வருமாறு மோடிக்கு அழைப்பு - இலங்கைக்கு 400 மில்லியன் கடன் வழங்க இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

முதலாவது அரச தலைவராக இலங்கை வருமாறு மோடிக்கு அழைப்பு - இலங்கைக்கு 400 மில்லியன் கடன் வழங்க இணக்கம்

தனது பதவியேற்பை அடுத்து, முதலாவது அரச தலைவராக இலங்கைக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷஅழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இரு அரச தலைவர்களும் சந்தித்துகொண்டபோது அவர் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க இந்திய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதில் 50 மில்லியன் டொலரை, தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக வழங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment