யாழ். மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ். மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், இன்றைய வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் 37 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
16 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் 21 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன எதிராக வாக்களித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
No comments:
Post a Comment